பள்ளியிலோ, கல்லூரியிலோ தலை சிறந்த மாணவராக இருப்பது பெரிய மந்திர வித்தையல்ல. அர்ப்பணிப்பு உணர்வுடன், சில பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும், நீங்களும் தலை சிறந்த மாணவர் தான். இதோ அந்த ரகசியங்கள்:
* புத்தக புழுவாக இல்லாமல், பல்வேறு அறிவுசார் விஷயங்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ள முற்பட வேண்டும்.
* வெறும் மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கைக்கு உதவாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
* இன்றைய போட்டிநிறைந்த உலகில் பேச்சு திறன், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், போன்ற கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
* எதிர்கால லட்சியத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இலக்கை அடைய சுணக்கமின்றி செயல்படுவதோடு, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
* நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றுவதோடு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை கேட்டு நடப்பது, இலட்சியத்தில் வெற்றி காண உதவும்.
* பாடப்புத்தகங்கள் தவிர்த்து, இதர அறிவுசார் புத்தகங்களை படிப்பது, பன்முக சிந்தனையை வளர்த்துக்கொள்ள உதவும்.
* எந்த சூழ்நிலையிலும் நாட்டுநலனுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
* நாட்டு நலன் சார்ந்த சேவைகளில், மாணவர்கள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி பருவத்திலேயே தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளில் இணைந்து செயல்படலாம்.
2 comments:
பயனுள்ள யோசனை. பகிர்வுக்கு நன்றி
I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
Post a Comment