Tuesday 9 July 2013
சிறந்த மாணவராக வேண்டுமா? இதோ அந்த ரகசியங்கள்
Labels:
அரசியல்,
அனுபவம்,
சமூகம்,
சிறுகதை,
நிகழ்வுகள்,
மாணவர்கள்.
at
01:03
Saturday 6 July 2013
மாணவர்கள் படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?
Labels:
அனுபவம்,
சமூகம்,
நிகழ்வுகள்,
மாணவர்கள்
at
01:49
Wednesday 5 June 2013
ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற....
கடந்த மூன்று ஆண்டுகளில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடத்தை பெண்களே பெற்று வருகின்றனர். 2010 ஆண்டுத் தேர்வில் சென்னையைச் சேர்ந்த திவ்ய தர்ஷினியும், 2011-ஆம் ஆண்டுத் தேர்வில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் படித்த ஷேனா அகர்வாலும், 2012 ஆண்டுத் தேர்வில் திருவனந்த புரத்தை சேர்ந்த ஹரிதா வி. குமாரும் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். இது இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்தை காட்டுகிறது.
Thursday 23 May 2013
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியராக பணிபுரியத் தேவையான தகுதிகளைச் சோதித்தறியவும், திறனுள்ள ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு நடத்துகிறது. (அண்மைத் தகவல்: ஆக.17, 18-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு; ஜூன் 17 முதல் விண்ணப்பம்)
தேசிய அளவிலான தேர்வை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நடத்துகிறது. மாநில அளவிலான தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலுள்ள கல்வி வாரியம் நடத்துகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 1-5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு முதல் தாள் ஆகும். 6-8ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இரண்டாம் தாள் ஆகும். 1-8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் முதல் மற்றும் இரண்டாம் தாள் இரண்டையுமே எழுதலாம்.
இடைநிலை ஆசிரியர்கள் (Secondary Grade) என அழைக்கப்படும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானத் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் பட்டய படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஐந்து முதல் எட்டாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரன்டாம் தாளை எழுத ஏதேனும் இளநிலை பட்டப் படிப்போடு (B.Sc) இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பும் (B.ed) படித்திருக்க வேண்டும். ஆசிரியர் பட்டய படிப்பு இறுதியாண்டு மற்றும் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருப்பவர்களும் தேர்வு எழுதலாம்.
இரண்டு தாள்களுமே கொள்குறி வகை வினாக்களைக் கொண்டவை. இரண்டு தாள்களுமே 150 வினாக்களைக் கொண்டவை. ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் கொண்டவை. தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதில்லை.
முதல் தாளில் கேள்விகள் பின்வரும் ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை
மொழித்தாள்-I
மொழித்தாள்-II
கணிதம்
சுற்றுச்சூழலியல்
ஒவ்வொரு பிரிவிலும் 30 வினாக்கள் கொண்டிருக்கும்.
இரண்டாம் தாளில் வினாக்கள் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் இருக்கும்
குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை
மொழித்தாள்-I
மொழித்தாள்-II
(அ) கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்)
(ஆ) சமூகவியல் - (சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்)
(இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால் போதுமானது.
முதல் மூன்று பிரிவுகளும் ஒவ்வொன்றும் 30 மதிப்பெண்களையும் கொண்டிருக்கும். நான்காவது பிரிவு 60 வினாக்களைக் கொண்டிருக்கும்.
அறுபது சதவிகித மதிப்பெண்கள் அதாவது 90 மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்தத் தகுதிச் சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்குச் செல்லக்கூடியது.
ஒரு தேர்வர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வுகளை எழுதலாம். ஏற்கனவே தேர்ச்சி பெற்ற தேர்வர், தனது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள மீண்டும் தேர்வுகள் எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதாலேயே அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுவார்கள் என்பதற்கு உறுதியில்லை, ஆசிரியர் பதவிக்கு தகுதியுடையவர் என்பது மட்டுமே பொருளாகும். இத்தகுதிச் சான்றிதழை வைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணிபுரிய பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாநிலங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றவர்கள், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே ஆசிரியராகப் பணிபுரியத் தகுதியுடையவர்கள், பிற மாநிலங்களில் சென்று பணிபுரிய முடியாது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவித்தது முதலே பல விமர்சனங்களைச் சந்தித்து வந்தது. முதல் தேர்விலேயே தேர்ச்சியடைந்தவர்களின் எண்ணிக்கை கவலைக்குரியதாக இருந்ததால், மீண்டும் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. முதல் தேர்வில் தேர்ச்சி விழுக்காடு குறைந்ததற்குக் காரணம் நேரக்குறைவே எனப் பலரால் குற்றம்சாட்டப்பட்டது. அது அடுத்து நடந்த துணைத் தேர்வில் பிரதிபலித்தது, நேரம் இரட்டிப்பாக்கப்பட்டது. 90 நிமிடங்களில் 150 வினாக்களுக்கு விடையளிப்பது எல்லாம் சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்தே அத்தகைய மாற்றம் அறிவிக்கப்ப்பட்டது.
இனிவரும் அடுத்தடுத்த தேர்வுகளில் தகுதி பெறுவதற்கான மதிப்பெண் விழுக்காடு குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். அதேபோல எல்லா பிரிவினருக்கும் ஒரே தேர்ச்சி அளவு என்பதையும் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். தேசியத் தகுதித் தேர்வைப் போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கும் ஒவ்வொரு தேர்ச்சி அளவை நிர்ணயிப்பது போன்ற மாற்றங்களையும் அடுத்தடுத்த தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.
Labels:
TN TET 2013.,
அரசியல்,
அனுபவம்,
கணிதம்.,
கல்வி,
சமூகம்,
சிறுகதை,
நிகழ்வுகள்
at
07:56
Wednesday 22 May 2013
TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற ஜுன் 17ம ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஆகஸ்ட் 17 ஆம் தேதியும். இரண்டாம் தாள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
SGT / Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm
BT / Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm
Recruitment Post = 13,000 (SGT+BT)
Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013
Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500
SC/ST/Disabled Fees: Rs. 250
Examination Fees: Rs. 500
SC/ST/Disabled Fees: Rs. 250
TRB வெளியிட்ட விளம்பரம் :
Labels:
TN TET 2013.,
அரசியல்,
அனுபவம்,
ஆசிரியர் தகுதித் தேர்வு,
சமூகம்,
செய்தி
at
01:54
Monday 20 May 2013
பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
பயமுறுத்தும் இந்தத் தேர்வு பூதத்திடமிருந்து நம் குழந்தைகளை எப்படியாவது விடுவிக்க முடியாதா என்பது ஒரு சில பெற்றோர்களின் ஏக்கமாக இருக்கிறது. அது மட்டுமா இந்தத் தேர்வு முறையையே மாற்றினால்தான் என்ன? என்பதும் அண்மைக்காலமாக கல்வியாளர்களிடம் முன் வைக்கப்படுகிற வினாவாக இருக்கிறது. இவற்றைப்பற்றிக் கொஞ்சம் மனம் திறந்து விவாதிப்போமா?
இன்றைய தேர்வு முறை
இன்றைய தேர்வு முறை மாணவர்களிடையே அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும், தன்னோடு பயில்பவர்களைவிட ஒரு மதிப்பெண்ணாவது அதிகம் பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அவர்களை தள்ளிவிடுகிறது. இத்தகைய போக்கு, கல்வியில் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது. இது ஒருபுறம் என்றால், கடந்த சில தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் இத்தகைய தேர்வு முறையையே கைவிட்டுவிட்டால் என்ன என்ற சிந்தனைக்கு வழிகோலியிருக்கின்றன.
தேர்வு குளறுபடிகள்
விடைத்தாள்கள் தீப்பற்றி எரிவதும், காணாமல் போவதும் தொடர்வண்டியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதும் அந்த பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வுகாண்பது என்று நம் அலுவலர்கள் ஆலோசித்து முடிவெடுப்பதும் கேலிக்கூத்தாகத்தான் உள்ளன. கேட்கின்ற நமக்கு அது ஒரு செய்தி அவ்வளவுதான். தேர்வு எழுதிய மாணவர்களுக்கோ வழ்க்கைப் பிரச்னை.
அச்சம் நிறைந்த இந்த தேர்வுகளை எப்போது எழுதி முடிப்போம் என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருக்கும்போது, நீ எழுதிய விடைத்தாள் காணமல் போய்விட்டது என்று தலையில் பாறாங்கல்லைப் போட்டால் அந்தப் பிஞ்சு உள்ளம் தாங்குமா? விடுதலை கிடைத்து வெளியே செல்லும் கைதியை மேலும் ஒரு வழக்கில் கைது செய்து மீண்டும் சிறையில் தள்ளினால் அவன் மன்நிலை எப்படியோ அப்படித்தான் இந்த மாணவனின் மன நிலையும்.
மொழிப் பாடங்களில் ஒரு தாள் காணாமல்போனாலோ சேதமடைந்தாலோ மற்றொரு தாளின் மதிப்பெண்ணைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம், வேறு பாடங்கள் எனில் அரையாண்டு காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற யோசனைகள் நமக்கு சில செய்திகளைச் சொல்கின்றன. பொதுத்தேர்வே இல்லாமல் காலாண்டு அரையாண்டு முழுஆண்டுத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை மாணவர்களுக்கு வழங்கிவிட்டால் என்ன மனித உழைப்பு, பொருள் செலவு, கால விரையம் என எதுவுமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களுக்கு மன உளைச்சல் இல்லை.
எழுதிய தேர்வுத்தாள்கள் இப்படியென்றால் சில தேர்வுகள் எழுதவே முடியாத அளவுக்கு மாணவர்களை பயமுறுத்துகின்றன. தேர்வுக்கு வினாத்தாள் இப்படித்தான் அமைய வேண்டும் என பாடநூல் எழுதும்போதே வினாத்தாள் வடிவமைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் அதன்படித்தான் வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் பொதுத்தேர்வில் மட்டும் அந்த நடைமுறைகள் காற்றில் பறந்துவிடுகின்றன. இது ஆசிரியர்களிடையே பல ஐயங்களை ஏற்படுத்துகின்றன.
ஆண்டு முழுவதும் பள்ளியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிச்சயமாக இத்தகைய வினாத்தாள்களை வடிவமைத்திருக்க முடியாது. வடிவமைக்கவும் மாட்டார்கள். அப்படியென்றால் இப்படியான வினாத்தாள்களை வடிவமைப்பது யார்? பாடநூலாசிரியர் குழுவுக்குத் தலைமை ஏற்கும் கல்லூரிப் பேராசிரியர்களா? ஆம், என்றால் ஏன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கிறீர்கள்? அதற்கும் பேராசிரியர்களையே நியமிக்கலாமே. பாடம் கற்பிப்பவருக்கே பாடநூல் எழுதும் உரிமையும் வினாத்தாள் எழுதும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் போராடும் சங்கங்கள் இந்த உரிமைக்காக இதுவரை போராடாமலிருப்பது மர்மமாகவே உள்ளது.
தேர்வில் பழமையான நடைமுறைகள்
அரசுப் பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் துறைதான் நடத்துகிறது. தேர்வு மையங்களைத் தீர்மானிப்பது அவற்றுக்கு எண்கள் வழங்குவது மாணவர்களுக்குத் தேர்வு எண்கள் வழங்குவது வினாத்தாள் அச்சடித்து வழங்குவது ஆகிய சில நடைமுறைகளை மட்டுமே இத்துறை செய்கிறது. அதன்பிறகு தேர்வின் அத்தனை பணிகளையும் ஆசிரியர்கள்தான் செய்கின்றனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு முதன்மைக்கண்காணிப்பாளர் தேவைக்கேற்ப உதவி கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் எடுத்துச்செல்வதற்கு துறை அலுவலர் என அனைத்தும் ஆசிரியர்கள்தான். அறைக் கண்காணிப்பாளர் 20 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நியமிக்கப் படுவர். பறக்கும் படை, நிற்கும் படை, அமரும் படை என முப்படைகளும் மாணவர்கள் காப்பியடிக்காமல் கண்காணிக்கும். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை சேகரித்து அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் தேர்வுத்துறையின் முத்திரையை பதித்து (இந்த நடைமுறை ஏன் என்று இன்றுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்) துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும் அவர் ஒரு உறைக்கு 15 தாள்கள் வீதம் வைத்து திருத்தும் மையத்திற்கு அனுப்பிட வேண்டும். இவைதான் பழைய நடைமுறைகள் என்றால் இந்த பணிகளை செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும் அப்படித்தான். (அறைக் கண்காணிப்பாளருக்கு ஒரு தேர்வுக்கு 60 ரூபாய்).
இந்த நடைமுறைகள் முடிந்து விடைத்தாள்கள் அங்கு போய் சேர்வதர்க்குள்தான் மேலே சொன்ன அத்தனைக் குளறுபடிகளும் அரங்கேறுகின்றன.இந்த நடைமுறைகள் எல்லாமே பழமையானவை. எல்லா துறைகளிலும் காலத்திற்கேற்ப மாற்றத்தை அனுமதிக்கும் நாம் ஏன் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாது?
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய இந்தத் தேர்வுமுறையை மாற்றினால்தான் என்ன? ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை உள்ளதுபோல் முழுமையான தொடர் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு தரநிலை அடிப்படையில் சான்றிதழ் வழங்கலாமே. நடுவண் கல்வி வாரியத்தில் அப்படித்தானே செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் ஓர் ஆண்டு முழுவதும் கற்றதை மூன்று மணி நேரத்தில் வாந்தியெடுக்கும் அவல நிலைக்கு ஆளாகாமல், நம் எதிர்கால இந்தியாவின் தூண்களைக் காப்போம்.
இன்றைய தேர்வு முறை
இன்றைய தேர்வு முறை மாணவர்களிடையே அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும், தன்னோடு பயில்பவர்களைவிட ஒரு மதிப்பெண்ணாவது அதிகம் பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அவர்களை தள்ளிவிடுகிறது. இத்தகைய போக்கு, கல்வியில் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது. இது ஒருபுறம் என்றால், கடந்த சில தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் இத்தகைய தேர்வு முறையையே கைவிட்டுவிட்டால் என்ன என்ற சிந்தனைக்கு வழிகோலியிருக்கின்றன.
தேர்வு குளறுபடிகள்
விடைத்தாள்கள் தீப்பற்றி எரிவதும், காணாமல் போவதும் தொடர்வண்டியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதும் அந்த பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வுகாண்பது என்று நம் அலுவலர்கள் ஆலோசித்து முடிவெடுப்பதும் கேலிக்கூத்தாகத்தான் உள்ளன. கேட்கின்ற நமக்கு அது ஒரு செய்தி அவ்வளவுதான். தேர்வு எழுதிய மாணவர்களுக்கோ வழ்க்கைப் பிரச்னை.
அச்சம் நிறைந்த இந்த தேர்வுகளை எப்போது எழுதி முடிப்போம் என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருக்கும்போது, நீ எழுதிய விடைத்தாள் காணமல் போய்விட்டது என்று தலையில் பாறாங்கல்லைப் போட்டால் அந்தப் பிஞ்சு உள்ளம் தாங்குமா? விடுதலை கிடைத்து வெளியே செல்லும் கைதியை மேலும் ஒரு வழக்கில் கைது செய்து மீண்டும் சிறையில் தள்ளினால் அவன் மன்நிலை எப்படியோ அப்படித்தான் இந்த மாணவனின் மன நிலையும்.
மொழிப் பாடங்களில் ஒரு தாள் காணாமல்போனாலோ சேதமடைந்தாலோ மற்றொரு தாளின் மதிப்பெண்ணைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம், வேறு பாடங்கள் எனில் அரையாண்டு காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற யோசனைகள் நமக்கு சில செய்திகளைச் சொல்கின்றன. பொதுத்தேர்வே இல்லாமல் காலாண்டு அரையாண்டு முழுஆண்டுத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை மாணவர்களுக்கு வழங்கிவிட்டால் என்ன மனித உழைப்பு, பொருள் செலவு, கால விரையம் என எதுவுமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களுக்கு மன உளைச்சல் இல்லை.
எழுதிய தேர்வுத்தாள்கள் இப்படியென்றால் சில தேர்வுகள் எழுதவே முடியாத அளவுக்கு மாணவர்களை பயமுறுத்துகின்றன. தேர்வுக்கு வினாத்தாள் இப்படித்தான் அமைய வேண்டும் என பாடநூல் எழுதும்போதே வினாத்தாள் வடிவமைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் அதன்படித்தான் வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் பொதுத்தேர்வில் மட்டும் அந்த நடைமுறைகள் காற்றில் பறந்துவிடுகின்றன. இது ஆசிரியர்களிடையே பல ஐயங்களை ஏற்படுத்துகின்றன.
ஆண்டு முழுவதும் பள்ளியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிச்சயமாக இத்தகைய வினாத்தாள்களை வடிவமைத்திருக்க முடியாது. வடிவமைக்கவும் மாட்டார்கள். அப்படியென்றால் இப்படியான வினாத்தாள்களை வடிவமைப்பது யார்? பாடநூலாசிரியர் குழுவுக்குத் தலைமை ஏற்கும் கல்லூரிப் பேராசிரியர்களா? ஆம், என்றால் ஏன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கிறீர்கள்? அதற்கும் பேராசிரியர்களையே நியமிக்கலாமே. பாடம் கற்பிப்பவருக்கே பாடநூல் எழுதும் உரிமையும் வினாத்தாள் எழுதும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் போராடும் சங்கங்கள் இந்த உரிமைக்காக இதுவரை போராடாமலிருப்பது மர்மமாகவே உள்ளது.
தேர்வில் பழமையான நடைமுறைகள்
அரசுப் பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் துறைதான் நடத்துகிறது. தேர்வு மையங்களைத் தீர்மானிப்பது அவற்றுக்கு எண்கள் வழங்குவது மாணவர்களுக்குத் தேர்வு எண்கள் வழங்குவது வினாத்தாள் அச்சடித்து வழங்குவது ஆகிய சில நடைமுறைகளை மட்டுமே இத்துறை செய்கிறது. அதன்பிறகு தேர்வின் அத்தனை பணிகளையும் ஆசிரியர்கள்தான் செய்கின்றனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு முதன்மைக்கண்காணிப்பாளர் தேவைக்கேற்ப உதவி கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் எடுத்துச்செல்வதற்கு துறை அலுவலர் என அனைத்தும் ஆசிரியர்கள்தான். அறைக் கண்காணிப்பாளர் 20 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நியமிக்கப் படுவர். பறக்கும் படை, நிற்கும் படை, அமரும் படை என முப்படைகளும் மாணவர்கள் காப்பியடிக்காமல் கண்காணிக்கும். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை சேகரித்து அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் தேர்வுத்துறையின் முத்திரையை பதித்து (இந்த நடைமுறை ஏன் என்று இன்றுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்) துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும் அவர் ஒரு உறைக்கு 15 தாள்கள் வீதம் வைத்து திருத்தும் மையத்திற்கு அனுப்பிட வேண்டும். இவைதான் பழைய நடைமுறைகள் என்றால் இந்த பணிகளை செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும் அப்படித்தான். (அறைக் கண்காணிப்பாளருக்கு ஒரு தேர்வுக்கு 60 ரூபாய்).
இந்த நடைமுறைகள் முடிந்து விடைத்தாள்கள் அங்கு போய் சேர்வதர்க்குள்தான் மேலே சொன்ன அத்தனைக் குளறுபடிகளும் அரங்கேறுகின்றன.இந்த நடைமுறைகள் எல்லாமே பழமையானவை. எல்லா துறைகளிலும் காலத்திற்கேற்ப மாற்றத்தை அனுமதிக்கும் நாம் ஏன் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாது?
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய இந்தத் தேர்வுமுறையை மாற்றினால்தான் என்ன? ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை உள்ளதுபோல் முழுமையான தொடர் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு தரநிலை அடிப்படையில் சான்றிதழ் வழங்கலாமே. நடுவண் கல்வி வாரியத்தில் அப்படித்தானே செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் ஓர் ஆண்டு முழுவதும் கற்றதை மூன்று மணி நேரத்தில் வாந்தியெடுக்கும் அவல நிலைக்கு ஆளாகாமல், நம் எதிர்கால இந்தியாவின் தூண்களைக் காப்போம்.
Saturday 18 May 2013
NET தேசியத் தகுதித் தேர்வு
முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள், கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்குத் தகுதியடைவதற்கும் (Lectureship), முனைவர் ஆய்வுப் பட்டப் படிப்புக்குத் தகுதியுடையவர், இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) ஆவதற்கும் பல்கலைக் கழக மாணியக்குழுவால் (UGC - University Grants Commission) நடத்தப்படும் தேர்வு NET - National Eligibility Test.
கலைப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வுகளை பல்கலைக் கழக மாணியக்குழு நடத்துகிறது. அறிவியல் பொறியியல் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தேர்வை பல்கலைக் கழக மாணியக்குழுவும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமும் (CSIR - Council of Scientific and Industrial Research) இணைந்து நடத்துகிறது.
விரிவுரையாளர் பதவிக்கு மட்டுமான தேர்வை எழுத வயது வரம்பு இல்லை. JRF தேர்வை எழுத பொது பிரிவினருக்கு வயது வரம்பு 28 ஆண்டுகள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு மேலும் 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்ச்சி உண்டு. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் அதற்குரிய சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதுநிலைப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், அவர்களது முதுநிலைப் பாடப்பிரிவு, துறையில் இந்த தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள். முதுநிலைப் படிப்பில் 55% மதிப்பெண்ணிற்கும் மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
UGC-NET:
UGC-NET தேர்வுக்கு http://ugcnetonline.in என்ற முகவரியில் இணைய வழியில் பதிவு செய்யலாம். பொதுப் பிரிவினருக்கு கட்டணம் 450 ரூபாயும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 225 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு 110 ரூபாயும் கட்டணம். வங்கியில் பணம் செலுத்திய ரசீதையும், இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்பத்தையும் அச்செடுத்து, தேர்வர் தேர்ந்தெடுத்திருக்கும் தேர்வு மையம் உள்ள பல்கலைக் கழகத்திற்கும் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
ஓர் ஆண்டில் இரண்டு முறை இத்தேர்வுகள் நடத்தப்படும். ஜூன் மாதத்தில் ஒரு முறையும் டிசம்பர் மாதத்தில் ஒரு முறையும் நடைபெறும். அந்த மாதங்களின் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று தேர்வுகள் நடைபெறும்.
இத்தேர்வுகள் மூன்று தாள்களைக் கொண்டிருக்கும். எல்லாத் தேர்வுகளுமே சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் கொள்குறி வினா வகையைக் கொண்டவை. தாள்-I மற்றும் தாள்-II ஒவ்வொன்றும் நூறு மதிப்பெண்களைக் கொண்டவை, ஒவ்வொரு தாளுக்கும் கால அளவு 75 நிமிடங்கள். முதல் தாளில் 60 வினாக்களில் இருந்து 50 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இரண்டாம் தாளில் 50 வினாக்களுக்குமே விடையளிக்க வேண்டும். மூன்றாவது தாள் 150 மதிப்பெண்கள் கொண்டவை. இத்தாள் 75 வினாக்கள் கொண்டது, அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். இதற்கான கால அளவு 150 நிமிடங்கள். முதல் தாள் தேர்வரின் திறனறி சோதனை மற்றும் ஆராய்ச்சி அடிப்படை முறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் மூன்றாம் தாள் தேர்வர் தேர்ந்தெடுத்த பாடங்களை அடிப்படையாகக் கொன்டது. தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவது கிடையாது.
தேர்ச்சிக்கான மதிப்பெண் அடிப்படை:
கலைப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வுகளை பல்கலைக் கழக மாணியக்குழு நடத்துகிறது. அறிவியல் பொறியியல் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தேர்வை பல்கலைக் கழக மாணியக்குழுவும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமும் (CSIR - Council of Scientific and Industrial Research) இணைந்து நடத்துகிறது.
விரிவுரையாளர் பதவிக்கு மட்டுமான தேர்வை எழுத வயது வரம்பு இல்லை. JRF தேர்வை எழுத பொது பிரிவினருக்கு வயது வரம்பு 28 ஆண்டுகள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு மேலும் 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்ச்சி உண்டு. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் அதற்குரிய சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதுநிலைப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், அவர்களது முதுநிலைப் பாடப்பிரிவு, துறையில் இந்த தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள். முதுநிலைப் படிப்பில் 55% மதிப்பெண்ணிற்கும் மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
UGC-NET:
UGC-NET தேர்வுக்கு http://ugcnetonline.in என்ற முகவரியில் இணைய வழியில் பதிவு செய்யலாம். பொதுப் பிரிவினருக்கு கட்டணம் 450 ரூபாயும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 225 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு 110 ரூபாயும் கட்டணம். வங்கியில் பணம் செலுத்திய ரசீதையும், இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்பத்தையும் அச்செடுத்து, தேர்வர் தேர்ந்தெடுத்திருக்கும் தேர்வு மையம் உள்ள பல்கலைக் கழகத்திற்கும் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
ஓர் ஆண்டில் இரண்டு முறை இத்தேர்வுகள் நடத்தப்படும். ஜூன் மாதத்தில் ஒரு முறையும் டிசம்பர் மாதத்தில் ஒரு முறையும் நடைபெறும். அந்த மாதங்களின் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று தேர்வுகள் நடைபெறும்.
இத்தேர்வுகள் மூன்று தாள்களைக் கொண்டிருக்கும். எல்லாத் தேர்வுகளுமே சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் கொள்குறி வினா வகையைக் கொண்டவை. தாள்-I மற்றும் தாள்-II ஒவ்வொன்றும் நூறு மதிப்பெண்களைக் கொண்டவை, ஒவ்வொரு தாளுக்கும் கால அளவு 75 நிமிடங்கள். முதல் தாளில் 60 வினாக்களில் இருந்து 50 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இரண்டாம் தாளில் 50 வினாக்களுக்குமே விடையளிக்க வேண்டும். மூன்றாவது தாள் 150 மதிப்பெண்கள் கொண்டவை. இத்தாள் 75 வினாக்கள் கொண்டது, அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். இதற்கான கால அளவு 150 நிமிடங்கள். முதல் தாள் தேர்வரின் திறனறி சோதனை மற்றும் ஆராய்ச்சி அடிப்படை முறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் மூன்றாம் தாள் தேர்வர் தேர்ந்தெடுத்த பாடங்களை அடிப்படையாகக் கொன்டது. தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவது கிடையாது.
தேர்ச்சிக்கான மதிப்பெண் அடிப்படை:
ஒவ்வொரு பாடத்திலும், பிரிவிலும் முதல் 15% இடங்களைப் பெறும் தேர்வர்கள் மட்டுமே விரிவுரையாளர் பணிக்குத் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
இதற்கு முன்பு கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டியிருந்த மூன்றாம் தாளும் இப்போது கொள்குறி வினா வகைக்கு மாற்றப்பட்டுள்ளது, அதே போல Negative Mark எனப்படும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் பழக்கம் இல்லாததால், அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாக யோசித்து, நிதானமாகவே பதிலளிக்கலாம், நேரமும் தாராளமாகவே இருக்கிறது. ஒரு வினாவுக்கு இரண்டு நிமிடங்கள் வரை கால அவகாசம் உள்ளது.
CSIR UGC-NET :
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இணைய வழியில் http://csirhrdg.res.in இந்த தளத்தில் விண்னப்பிக்கலாம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது விபிபி மூலம் பெற்றுக்கொள்ளலாம். பொதுப் பிரிவினருக்கு 400 ரூபாய் கட்டணமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 200 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 ரூபாயும் கட்டணம் விதிக்கப்படுகிறது.
200 ம்திப்பெண்களைக் கொண்ட தேர்வுத்தாள் Part- A, Part- B, Part- C என்ற மூன்று பிரிவைக் கொன்டுள்ளது. எல்லாப் பாடங்களும் Part- A பொதுவானது, இப்பிரிவில் பொது அறிவியல், திறனறிதல், ஆராய்ச்சி அடிப்படைகள் தொடர்பான கேல்விகள் இருக்கும். கேட்கப்பட்டிருக்கும் 20 கேள்விகளிலிருந்து 15 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். Part- Bயில் தேர்வரது விருப்பத் தேர்வில் இருந்து 50 கேள்விகள் இருக்கும், அவற்றில் 35 கேள்விகளுக்கு பதிலளிக்க வேன்டும். இவ்விரு பிரிவிலும் எல்லாக் கேள்விகளும் இரண்டு மதிப்பெண்கள் கொண்டவை. Part- C பிரிவில், விருப்பத் தேர்வில் இருந்து உயர்நிலைக் கேள்விகள் இடம்பெறும். அறிவியல் கோட்பாடுகளை, கேட்கப்பட்டிருக்கும் சிக்கல்களில் பயன்படுத்தி தீர்வு கானும் விதமான கேள்விகள் இருக்கும். கேட்கப்பட்டிருக்கும் 75 கேள்விகளில் 50 கேள்விகளுக்கு விடையளிக்கப்பட வேன்டும். ஒவ்வொரு கேள்வியும் நான்கு மதிப்பெண்களைக் கொண்டது. எல்லாப் பிரிவுகளிலும் தவறான விடைகளுக்கு 25% மதிப்பெண் கழிக்கப்படும்.
SLET/SET:
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேறுபாட்டால், தேசிய அளவில் கல்லூரி பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவது அனைத்துப் பாடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த போதாது என்பதால் UGC, ஒவ்வொரு மாநிலத்திலும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்த SLET அல்லது SET (State level eligibility test) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வின் அமைப்பு பாடத்திட்டம் அனைத்தும் NET தேர்வையே ஒத்தது.
இதற்கு முன்பு கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டியிருந்த மூன்றாம் தாளும் இப்போது கொள்குறி வினா வகைக்கு மாற்றப்பட்டுள்ளது, அதே போல Negative Mark எனப்படும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் பழக்கம் இல்லாததால், அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாக யோசித்து, நிதானமாகவே பதிலளிக்கலாம், நேரமும் தாராளமாகவே இருக்கிறது. ஒரு வினாவுக்கு இரண்டு நிமிடங்கள் வரை கால அவகாசம் உள்ளது.
CSIR UGC-NET :
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இணைய வழியில் http://csirhrdg.res.in இந்த தளத்தில் விண்னப்பிக்கலாம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது விபிபி மூலம் பெற்றுக்கொள்ளலாம். பொதுப் பிரிவினருக்கு 400 ரூபாய் கட்டணமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 200 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 ரூபாயும் கட்டணம் விதிக்கப்படுகிறது.
200 ம்திப்பெண்களைக் கொண்ட தேர்வுத்தாள் Part- A, Part- B, Part- C என்ற மூன்று பிரிவைக் கொன்டுள்ளது. எல்லாப் பாடங்களும் Part- A பொதுவானது, இப்பிரிவில் பொது அறிவியல், திறனறிதல், ஆராய்ச்சி அடிப்படைகள் தொடர்பான கேல்விகள் இருக்கும். கேட்கப்பட்டிருக்கும் 20 கேள்விகளிலிருந்து 15 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். Part- Bயில் தேர்வரது விருப்பத் தேர்வில் இருந்து 50 கேள்விகள் இருக்கும், அவற்றில் 35 கேள்விகளுக்கு பதிலளிக்க வேன்டும். இவ்விரு பிரிவிலும் எல்லாக் கேள்விகளும் இரண்டு மதிப்பெண்கள் கொண்டவை. Part- C பிரிவில், விருப்பத் தேர்வில் இருந்து உயர்நிலைக் கேள்விகள் இடம்பெறும். அறிவியல் கோட்பாடுகளை, கேட்கப்பட்டிருக்கும் சிக்கல்களில் பயன்படுத்தி தீர்வு கானும் விதமான கேள்விகள் இருக்கும். கேட்கப்பட்டிருக்கும் 75 கேள்விகளில் 50 கேள்விகளுக்கு விடையளிக்கப்பட வேன்டும். ஒவ்வொரு கேள்வியும் நான்கு மதிப்பெண்களைக் கொண்டது. எல்லாப் பிரிவுகளிலும் தவறான விடைகளுக்கு 25% மதிப்பெண் கழிக்கப்படும்.
SLET/SET:
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேறுபாட்டால், தேசிய அளவில் கல்லூரி பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவது அனைத்துப் பாடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த போதாது என்பதால் UGC, ஒவ்வொரு மாநிலத்திலும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்த SLET அல்லது SET (State level eligibility test) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வின் அமைப்பு பாடத்திட்டம் அனைத்தும் NET தேர்வையே ஒத்தது.
Friday 3 May 2013
ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்?
பத்தாம் வகுப்புக்குப் பிறகு, மேல்நிலைப் பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு எழும் முதல் கேள்வி... ப்ளஸ் 1-ல் என்ன க்ரூப் எடுக்கலாம்?
'அப்பா அந்த க்ரூப் எடுக்கச் சொன்னார்’, 'அம்மாதான் இந்த க்ரூப் எடுத்தா நல்லதுன்னு சொன்னாங்க’, 'என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எடுக்கிறதாலே இதே க்ரூப்பை நான் எடுக்கிறேன்’, 'என் மார்க்குக்கு இந்த க்ரூப்தான் கிடைச்சுது’, 'என்னோட டீச்சர் சொன்னதால் இந்த க்ரூப்பை எடுக்கிறேன்’.
ப்ளஸ் 1 சேரும் மாணவர்கள் பலரும் தங்களது க்ரூப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு இது போன்ற காரணங்களையே சொல்கின்றனர். அவர்களில் பலரும் சில மாதங்கள் கழித்து, 'அய்யய்யோ, அந்த க்ரூப்பை எடுத்து இருக்கலாமே!’, 'இந்த க்ரூப் எடுத்திருந்தால் நல்லா இருந்திருக்குமே' என்று புலம்புவதும் உண்டு. இத்தகைய நிலைக்கு ஆளாகாமல், உங்களுக்கும் உங்கள் இலக்குகளுக்கும் பொருத்தமான க்ரூப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டவே இந்தச் சிறப்புப் பக்கங்கள்...
பல துறைகளில் சாதிக்கலாம்!
கணிதத்திலும் அறிவியலிலும் அதிகமான ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் 'டிக்' செய்ய வேண்டியது ஃபர்ஸ்ட் க்ரூப் (Group- I).
கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைக்கொண்டது ஃபர்ஸ்ட் க்ரூப். இந்தப் பிரிவில் உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், பயோ-கெமிஸ்ட்ரி, இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன், ஹோம் சயின்ஸ் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாகத் தேர்வுசெய்யலாம். இந்த விருப்பப் பாடங்கள், பள்ளிகளுக்குப் பள்ளி மாறுபட்டு இருக்கலாம்.
ஃபர்ஸ்ட் க்ரூப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் கவனத்தில்கொள்ள வேண்டியவைபற்றி, நெல்லை மாவட்டம் - இலத்தூரில் உள்ள லெட்சுமி ஹரிஹர பள்ளியின் ஆசிரியர், எஸ்.சரவணபெருமாள் கூறும்போது, ''ஃபர்ஸ்ட் க்ரூப் எடுத்தால்தான் நமக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் உள்ளது. அது தவறு. எந்த க்ரூப்பைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும், அதில் உள்ள பாடங்களையும், அதைப் படிப்பதால் என்ன பயன் என்பதையும்தான் கருத்தில்கொள்ள வேண்டும்.
பொதுவாக, பத்தாம் வகுப்பின் ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கே இந்த க்ரூப்பை பள்ளி ஒதுக்கும். பள்ளியில் தருகிறார்களே என்பதற்காக அல்லாமல், கணக்கு மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில் மிகுதியான ஆர்வமும், அதிக ஈடுபாடும் இருந்தால் மட்டுமே இதைத் தேர்வுசெய்ய வேண்டும். இந்த இரு பாடங்களின் அடிப்படையான விஷயங்களை முழுமையாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான், இந்தப் பிரிவில் சிறந்து விளங்க முடியும்.
நீங்கள் இதுவரை உங்கள் ஆசிரியரையே சார்ந்து படித்து வந்திருப்பீர்கள். மேல்நிலைப் பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், ஆசிரியர் என்பவர் வழிகாட்டுதலை வழங்குபவர் மட்டுமே. உங்களின் பங்குதான் அதிகமாக இருக்கும். எனவே, உங்களது க்ரூப்பைத் தேர்ந்தெடுக்கும் முன், அதில் உள்ள பாடங்களைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உயிரியலை விருப்பப் பாடமாகக் கொண்டு, ஃபர்ஸ்ட் க்ரூப்பை எடுத்து, ப்ளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால், மருத்துவ மற்றும் பொறியியல் இரண்டிலும் சாதிக்கலாம். இதைத் தவிர மற்ற விருப்பப் பாடங்களுடன் இந்த க்ரூப்பைத் தேர்ந்தெடுத்தால், பொறியியல் மட்டுமின்றி, கெமிக்கல், அணுசக்தி, விண்வெளி, மென்பொருள், கட்டடக் கலை, கடல்சார் படிப்பு, கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த இளங்கலைப் படிப்புகள் என எந்தத் துறையிலும் நீங்கள் வெற்றியாளராக வலம்வர முடியும்.
தமிழ்வழி படிக்கும் மாணவர்களிடம் இருக்கும் ஒரே பின்னடைவு... ஆங்கிலத்தில் சரளமாகப் பேச இயலாததுதான். தாய்மொழியில் பாடங்களைப் படிப்பதால், உங்களுக்குத் துறை சார்ந்த சிந்தனையும் படைப்பாற்றலும் மிகுதியாக இருக்கும். ஆனால், உங்களில் பலருக்கும் மனதில் உள்ளதை ஆங்கிலத்தில் சொல்வதில் தயக்கம் இருக்கலாம். ஆரம்பத்தில் இருந்தே முறையான பயிற்சிகள் இருந்தால், ப்ளஸ் -2 முடிக்கும்போது கம்யூனிகேஷனிலும் அசத்தத் தொடங்குவீர்கள். இது, ஃபர்ஸ்ட் க்ரூப் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே மிகவும் முக்கியமானது'' என்கிறார் சரவண பெருமாள்.
'அப்பா அந்த க்ரூப் எடுக்கச் சொன்னார்’, 'அம்மாதான் இந்த க்ரூப் எடுத்தா நல்லதுன்னு சொன்னாங்க’, 'என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எடுக்கிறதாலே இதே க்ரூப்பை நான் எடுக்கிறேன்’, 'என் மார்க்குக்கு இந்த க்ரூப்தான் கிடைச்சுது’, 'என்னோட டீச்சர் சொன்னதால் இந்த க்ரூப்பை எடுக்கிறேன்’.
ப்ளஸ் 1 சேரும் மாணவர்கள் பலரும் தங்களது க்ரூப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு இது போன்ற காரணங்களையே சொல்கின்றனர். அவர்களில் பலரும் சில மாதங்கள் கழித்து, 'அய்யய்யோ, அந்த க்ரூப்பை எடுத்து இருக்கலாமே!’, 'இந்த க்ரூப் எடுத்திருந்தால் நல்லா இருந்திருக்குமே' என்று புலம்புவதும் உண்டு. இத்தகைய நிலைக்கு ஆளாகாமல், உங்களுக்கும் உங்கள் இலக்குகளுக்கும் பொருத்தமான க்ரூப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டவே இந்தச் சிறப்புப் பக்கங்கள்...
பல துறைகளில் சாதிக்கலாம்!
கணிதத்திலும் அறிவியலிலும் அதிகமான ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் 'டிக்' செய்ய வேண்டியது ஃபர்ஸ்ட் க்ரூப் (Group- I).
கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைக்கொண்டது ஃபர்ஸ்ட் க்ரூப். இந்தப் பிரிவில் உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், பயோ-கெமிஸ்ட்ரி, இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன், ஹோம் சயின்ஸ் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாகத் தேர்வுசெய்யலாம். இந்த விருப்பப் பாடங்கள், பள்ளிகளுக்குப் பள்ளி மாறுபட்டு இருக்கலாம்.
ஃபர்ஸ்ட் க்ரூப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் கவனத்தில்கொள்ள வேண்டியவைபற்றி, நெல்லை மாவட்டம் - இலத்தூரில் உள்ள லெட்சுமி ஹரிஹர பள்ளியின் ஆசிரியர், எஸ்.சரவணபெருமாள் கூறும்போது, ''ஃபர்ஸ்ட் க்ரூப் எடுத்தால்தான் நமக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் உள்ளது. அது தவறு. எந்த க்ரூப்பைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும், அதில் உள்ள பாடங்களையும், அதைப் படிப்பதால் என்ன பயன் என்பதையும்தான் கருத்தில்கொள்ள வேண்டும்.
பொதுவாக, பத்தாம் வகுப்பின் ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கே இந்த க்ரூப்பை பள்ளி ஒதுக்கும். பள்ளியில் தருகிறார்களே என்பதற்காக அல்லாமல், கணக்கு மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில் மிகுதியான ஆர்வமும், அதிக ஈடுபாடும் இருந்தால் மட்டுமே இதைத் தேர்வுசெய்ய வேண்டும். இந்த இரு பாடங்களின் அடிப்படையான விஷயங்களை முழுமையாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான், இந்தப் பிரிவில் சிறந்து விளங்க முடியும்.
நீங்கள் இதுவரை உங்கள் ஆசிரியரையே சார்ந்து படித்து வந்திருப்பீர்கள். மேல்நிலைப் பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், ஆசிரியர் என்பவர் வழிகாட்டுதலை வழங்குபவர் மட்டுமே. உங்களின் பங்குதான் அதிகமாக இருக்கும். எனவே, உங்களது க்ரூப்பைத் தேர்ந்தெடுக்கும் முன், அதில் உள்ள பாடங்களைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உயிரியலை விருப்பப் பாடமாகக் கொண்டு, ஃபர்ஸ்ட் க்ரூப்பை எடுத்து, ப்ளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால், மருத்துவ மற்றும் பொறியியல் இரண்டிலும் சாதிக்கலாம். இதைத் தவிர மற்ற விருப்பப் பாடங்களுடன் இந்த க்ரூப்பைத் தேர்ந்தெடுத்தால், பொறியியல் மட்டுமின்றி, கெமிக்கல், அணுசக்தி, விண்வெளி, மென்பொருள், கட்டடக் கலை, கடல்சார் படிப்பு, கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த இளங்கலைப் படிப்புகள் என எந்தத் துறையிலும் நீங்கள் வெற்றியாளராக வலம்வர முடியும்.
தமிழ்வழி படிக்கும் மாணவர்களிடம் இருக்கும் ஒரே பின்னடைவு... ஆங்கிலத்தில் சரளமாகப் பேச இயலாததுதான். தாய்மொழியில் பாடங்களைப் படிப்பதால், உங்களுக்குத் துறை சார்ந்த சிந்தனையும் படைப்பாற்றலும் மிகுதியாக இருக்கும். ஆனால், உங்களில் பலருக்கும் மனதில் உள்ளதை ஆங்கிலத்தில் சொல்வதில் தயக்கம் இருக்கலாம். ஆரம்பத்தில் இருந்தே முறையான பயிற்சிகள் இருந்தால், ப்ளஸ் -2 முடிக்கும்போது கம்யூனிகேஷனிலும் அசத்தத் தொடங்குவீர்கள். இது, ஃபர்ஸ்ட் க்ரூப் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே மிகவும் முக்கியமானது'' என்கிறார் சரவண பெருமாள்.
Friday 26 April 2013
வெற்றிக்கான மந்திரம்...
அகப்பார்வை, நுணுக்க சிந்தனை, மீளும் திறன், குழுப் பணி, வலுவான தகவல்தொடர்பு, நேர மேலாண்மை மற்றும் படைப்புத்திறன் ஆகிய அம்சங்கள், ஒருவரின் வெற்றிக்கான அடிப்படை அச்சாரங்கள்.
இன்றைய நிலையில், மாற்றமானது மிக விரைவாக நிகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் புரட்சியால், தகவல்கள், விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விதிமுறைகள் மாறிவிட்டன. ஐ.பி.எம்., விளம்பரம் ஒன்று இவ்வாறு கூறுகிறது, "அமெரிக்காவிலுள்ள அனைத்து நூலகங்களிலுமுள்ள தகவல்களைக் காட்டிலும், அதிகமான தகவல்கள் ஒரு நாளில் உருவாக்கப்படுகின்றன" என்பதுதான் அது. இத்தகவல்களை பெறுவது மிகவும் எளிதான ஒன்றாகவும் இருக்கிறது. மொபைலில் இண்டர்நெட் போன்றவை இவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விரைந்த மாற்றத்திற்கான சில உதாரணங்களை இங்கே பார்க்கலாம்;
கடந்த 2006ம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 2.5 பில்லியன் கூகுள் தேடல்கள் இருந்தன. ஆனால், 2008ல் அந்த எண்ணிக்கை 30 பில்லியனை தொட்டது. தற்போது, அது 100 பில்லியனாக உள்ளது.
இண்டர்நெட் வசதியுள்ள சாதனங்களின் எண்ணிக்கை, கடந்த 1984ம் ஆண்டில், 1000 என்ற அளவில் இருந்தது. 1992ம் ஆண்டில் 1 மில்லியன் என்ற அளவிற்கு வந்தது. அதேசமயம், 2008ம் ஆண்டில் 1 பில்லியனாக உயர்ந்தது. அந்த எண்ணிக்கை இந்த 2013ம் ஆண்டில் அந்த அளவு 1 டிரில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப தகவல்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு 2 வருடத்திலும் இரு மடங்காக அதிகரிக்கின்றன. எனவே, பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் முதலாமாண்டில் படித்த விஷயங்கள், அவர்கள் மூன்றாமாண்டு செல்லும்போது காலாவதியாகி விடுகின்றன. எதிர்கால பணிசெய்யும் உலகம், விரைவாக மாறிக்கொண்டிருக்கும் ஒன்றாக உள்ளது. எனவே, தற்போதைய மாணவர்கள், எதிர்காலத்தில், தங்களின் வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியான பணியை பெறுவார்களா? என்பதை நம்மால் கூற முடியாது.
ஒரு சராசரி பணியாளர், தனது 40வது வயதை அடையும்போது, குறைந்தபட்சம் 10 பணிகளுக்கு மாறியிருப்பார் என்று அமெரிக்க தொழிலாளர் துறை கூறுகிறது. இதுபோன்ற நிலை இந்தியாவிற்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. எதிர்கால வேலைவாய்ப்பு சந்தையைப் பற்றி ஒரு சமீபத்திய வீடியோ கிளிப் இவ்வாறு கூறுகிறது, "இப்போது நடைமுறையில் இல்லாத பணிகளுக்காகவும், இதுவரை கண்டுபிடிக்கப்படாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும், இதுவரை அறியப்படாத சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் நாங்கள் மாணவர்களை தயார்படுத்துகிறோம்" என்பதுதான் அது.
தற்போது பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் அம்சங்கள், எதிர்காலத்தில் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணிக்கு தொடர்பற்றதாக இருப்பதை உணர்வர். ஏனெனில், உலகம் அந்தளவு வேகமாக மாறிக்கொண்டுள்ளது. இங்கேதான், வெற்றிக்கான உண்மை தேவைகளை புரிந்துகொள்ள வேண்டிய தேவை எழுகிறது. இக்கட்டுரையின் முதலில் சொல்லப்பட்ட அம்சங்கள்தான் அவை. பல்வேறான துறைகளை சார்ந்த தொழில் நிபுணர்களுடன் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்த பின்னரே, மேற்கூறிய வெற்றிக்கான அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன. ஒருவர், எந்த துறையில் நுழைந்தாலும், அதில் அவர் வெற்றிக்கொடி நாட்ட, மேற்கூறப்பட்ட 7 பண்புகளும் இன்றியமையாதவை.
Thursday 18 April 2013
Wednesday 17 April 2013
Saturday 13 April 2013
Friday 12 April 2013
Thursday 11 April 2013
கணிதத்தை காதலிப்போம்..
இன்றைய சூழலில், ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கானது என்பதுபலரது
கருத்தாக உள்ளது. இதன் காரணமாக கணிதப் பிரிவில்ஆர்வமுள்ள மாணவர்கள் கூட,
பிளஸ் 2 முடித்ததும் கல்லூரியில்கணிதப் பிரிவில் விருப்பமில்லாமல்
சேர்கின்றனர். ஒருமாணவருக்கு இயல்பாக எதில் ஆர்வமோ, அந்த
துறையைதேர்ந்தெடுத்தால் முழு ஈடுபாட்டோடும், விருப்பத்தோடும் படித்து
அத்துறையில் முன்னேற முடியும்.
Wednesday 10 April 2013
Subscribe to:
Posts (Atom)