Friday 26 April 2013

வெற்றிக்கான மந்திரம்...


அகப்பார்வை, நுணுக்க சிந்தனை, மீளும் திறன், குழுப் பணி, வலுவான தகவல்தொடர்பு, நேர மேலாண்மை மற்றும் படைப்புத்திறன் ஆகிய அம்சங்கள், ஒருவரின் வெற்றிக்கான அடிப்படை அச்சாரங்கள்.

இன்றைய நிலையில், மாற்றமானது மிக விரைவாக நிகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் புரட்சியால், தகவல்கள், விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விதிமுறைகள் மாறிவிட்டன. ஐ.பி.எம்., விளம்பரம் ஒன்று இவ்வாறு கூறுகிறது, "அமெரிக்காவிலுள்ள அனைத்து நூலகங்களிலுமுள்ள தகவல்களைக் காட்டிலும், அதிகமான தகவல்கள் ஒரு நாளில் உருவாக்கப்படுகின்றன" என்பதுதான் அது. இத்தகவல்களை பெறுவது மிகவும் எளிதான ஒன்றாகவும் இருக்கிறது. மொபைலில் இண்டர்நெட் போன்றவை இவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விரைந்த மாற்றத்திற்கான சில உதாரணங்களை இங்கே பார்க்கலாம்;

கடந்த 2006ம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 2.5 பில்லியன் கூகுள் தேடல்கள் இருந்தன. ஆனால், 2008ல் அந்த எண்ணிக்கை 30 பில்லியனை தொட்டது. தற்போது, அது 100 பில்லியனாக உள்ளது.

இண்டர்நெட் வசதியுள்ள சாதனங்களின் எண்ணிக்கை, கடந்த 1984ம் ஆண்டில், 1000 என்ற அளவில் இருந்தது. 1992ம் ஆண்டில் 1 மில்லியன் என்ற அளவிற்கு வந்தது. அதேசமயம், 2008ம் ஆண்டில் 1 பில்லியனாக உயர்ந்தது. அந்த எண்ணிக்கை இந்த 2013ம் ஆண்டில் அந்த அளவு 1 டிரில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப தகவல்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு 2 வருடத்திலும் இரு மடங்காக அதிகரிக்கின்றன. எனவே, பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் முதலாமாண்டில் படித்த விஷயங்கள், அவர்கள் மூன்றாமாண்டு செல்லும்போது காலாவதியாகி விடுகின்றன. எதிர்கால பணிசெய்யும் உலகம், விரைவாக மாறிக்கொண்டிருக்கும் ஒன்றாக உள்ளது. எனவே, தற்போதைய மாணவர்கள், எதிர்காலத்தில், தங்களின் வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியான பணியை பெறுவார்களா? என்பதை நம்மால் கூற முடியாது.

ஒரு சராசரி பணியாளர், தனது 40வது வயதை அடையும்போது, குறைந்தபட்சம் 10 பணிகளுக்கு மாறியிருப்பார் என்று அமெரிக்க தொழிலாளர் துறை கூறுகிறது. இதுபோன்ற நிலை இந்தியாவிற்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. எதிர்கால வேலைவாய்ப்பு சந்தையைப் பற்றி ஒரு சமீபத்திய வீடியோ கிளிப் இவ்வாறு கூறுகிறது, "இப்போது நடைமுறையில் இல்லாத பணிகளுக்காகவும், இதுவரை கண்டுபிடிக்கப்படாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும், இதுவரை அறியப்படாத சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் நாங்கள் மாணவர்களை தயார்படுத்துகிறோம்" என்பதுதான் அது.

தற்போது பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் அம்சங்கள், எதிர்காலத்தில் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணிக்கு தொடர்பற்றதாக இருப்பதை உணர்வர். ஏனெனில், உலகம் அந்தளவு வேகமாக மாறிக்கொண்டுள்ளது. இங்கேதான், வெற்றிக்கான உண்மை தேவைகளை புரிந்துகொள்ள வேண்டிய தேவை எழுகிறது. இக்கட்டுரையின் முதலில் சொல்லப்பட்ட அம்சங்கள்தான் அவை. பல்வேறான துறைகளை சார்ந்த தொழில் நிபுணர்களுடன் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்த பின்னரே, மேற்கூறிய வெற்றிக்கான அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன. ஒருவர், எந்த துறையில் நுழைந்தாலும், அதில் அவர் வெற்றிக்கொடி நாட்ட, மேற்கூறப்பட்ட 7 பண்புகளும் இன்றியமையாதவை.

Thursday 18 April 2013

கணினி வழிக் கல்வி-கைப்பணத்தில் கிராமத்து ஆசிரியர் சேவை



புதுக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், 66 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கூலி வேலை செய்வோரின் குழந்தைகள் அதிகம். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முயற்சியால், கணினி மூலம் கல்வி கற்கின்றனர். 

Wednesday 17 April 2013

ஐ.ஏ.எஸ். ஆகனும்ன்னு விருப்பமா?அப்ப இதைப் படியுங்கள்!


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என்கின்ற பதவிகளைக் கேட்டாலே அந்தப் பதவி வகிப்பவர்களை வியந்து நோக்கி வருகிற இளைஞரா நீங்கள்? அந்தப் படிப்பை படித்துத் தேறி "அது போன்ற பதவிகளை நாமும் அடைய முடியுமா' என நினைத்ததுண்டா? நிச்சயம் உங்களால் முடியும்! இதோ - சிவில் சர்வீஸ் தேர்வுகளை சுலபமாகக் கையாளும் வழிகள் இங்கே...

விவசாய பல்கலையில் மே 6 முதல் இளநிலை சேர்க்கை துவக்கம்


கோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் சேர மே 6 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது.

பிளஸ் டூவுக்குப் பின் என்ன படிக்கலாம்?

Saturday 13 April 2013

பாராமெடிக்கல் படிப்பு - ராமச்சந்திரா பல்கலை கழகம் அறிவுப்பு



ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக்கழகத்தில், பாராமெடிக்கல் படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலையில் பி.பார்ம், பி.எஸ்சி.,(நர்சிங், உடற்கல்வி, அலைடு ஹெல்த் சயின்ஸ், பயோ-மெடிக்கல் சயின்ஸ்), பி.ஏ.எஸ்.எல்.பி ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றது.

Friday 12 April 2013

விற்பனைக்கு வரும் தனியார் கல்லூரிகள்



கோவை: தமிழகத்தில், குறிப்பாக கோவை பிராந்தியத்தில், பல கல்லூரிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொறியியல் கல்லூரிகள். மாணவர் பற்றாக்குறையே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Thursday 11 April 2013

22 இலட்சம் மாணவர்கள் என்ன ஆனார்கள்- விட்டுப்போன மர்மம் என்ன?



தமிழகத்தில், அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும், ஆன் -லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதில், 22 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளன.

கணிதத்தை காதலிப்போம்..


இன்றைய சூழலில், ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கானது என்பதுபலரது கருத்தாக உள்ளது. இதன் காரணமாக கணிதப் பிரிவில்ஆர்வமுள்ள மாணவர்கள் கூட, பிளஸ் 2 முடித்ததும் கல்லூரியில்கணிதப் பிரிவில் விருப்பமில்லாமல் சேர்கின்றனர். ஒருமாணவருக்கு இயல்பாக எதில் ஆர்வமோ, அந்த துறையைதேர்ந்தெடுத்தால் முழு ஈடுபாட்டோடும், விருப்பத்தோடும் படித்து அத்துறையில் முன்னேற முடியும்.

Wednesday 10 April 2013

கல்விக்கு முக்கியம் எது ?



பள்ளிகளில் பாட முறை மாறிக் கொண்டே இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...